கோப்புப்படம் 
தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்.

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூலை 25) தெரிவித்துள்ளது.

வடக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வங்கதேசம், மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமனது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்கத்தின் கரையை இன்று கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வடக்கு ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The India Meteorological Department (IMD) said today (July 25) that the low pressure area formed in the Bay of Bengal has developed into a depression.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT