முகப்பு
தமிழ்நாடு

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் குறித்து...

Updated On : 31 ஜூலை, 2025 at 10:48 AM
தமிழக அரசு
பகிர்:

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை இன்று(ஜூலை 31) தலைமைச் செயலர் நா. முருகானந்தம் பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கத்திற்கு இயற்கை வளங்கள் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது

நித்துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு வடநெரே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிதித் துறை இணைச் செயலாளராக ராஜ கோபால் சுன்கரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தீபக் ஜேக்கப் நில அளவுத்துறை இயக்குநராகவும், கஜலட்சுமி போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையராகவும், கவிதா ராமு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குடிநீர் வடிவால் வாரிய மேலாண்மை இயக்குநராக சமீரனும், மீன்வளத்துறை இயக்குநராக முரளீதரனும், வருவாய் நிர்வாக ஆணையராக கிரண் குராலாவும, கோவை வணிக வரி இணை ஆணையராக தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்வும், சென்னை வணிக வரி (அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையராக நாரயண சர்மா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

summary

The Tamil Nadu government has announced that 11 IAS officers have been transferred in Tamil Nadu.

முழு கட்டுரையைப் படிக்க →