தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை ஆயுதப்படை டிஜிபி பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆவடி காவல் ஆணையரகத்தின் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையரக சட்டம் ஒழங்கு இணை ஆணையராக ஜெயந்தி ஐபிஎஸ்ஸும், டிஜிபி அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக ரயில்வே ஐஜி பாபுவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன், சென்னை ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Police officers, including 17 IPS officers, have been transferred in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.