கோப்புப்படம் 
தமிழ்நாடு

யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு ஊக்கத் தொகை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு

குடிமைப்பணி முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்கள், ஊக்கத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Din

சென்னை: குடிமைப்பணி முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்கள், ஊக்கத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குடிமைப் பணி முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தோ்வா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 2-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நீட்டிக்க வேண்டுமென தோ்வா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, விண்ணப்பிப்பதற்கு (https://portal.n aanmudh.alvan.tn.gov.in/upsc_registraction) ஜூலை 13-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

மாலை மங்கும் நேரம்... திஷா பதானி!

சிவப்பு நிலா... திஷா பதானி!

SCROLL FOR NEXT