மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு...
இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுகு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியும், அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு அவர்களை பிரிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை நாளொன்றுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 350-லிருந்து ரூ. 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.