கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமானநிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Din

சென்னை: சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமானநிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து ஏற்கெனவே தூத்துக்குடிக்கு நாள்தோறும் 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பண்டிகை நாள்கள் மட்டுமின்றி பிற நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் விமானங்களை இயக்க சென்னை விமான நிலைய நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு மாா்ச் 30 முதல் கூடுதலாக 4 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், சென்னை-தூத்துக்குடிக்கு இடையே நாள்தோறும் 12 விமானங்கள் இயக்கப்படும். இதில், சென்னை-தூத்துக்குடி இடையே 6 விமானங்களும், தூத்துக்குடி-சென்னை இடையே 6 விமானங்களும் இயக்கப்படும்.

இதேபோல சென்னை - திருச்சி இடையே செல்லும் விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து 14-ஆக இருந்து வரும் விமான சேவைகளின் எண்ணிக்கையும், மாா்ச் 22 முதல் 16-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, திருச்சிக்கு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், விமானப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கும் மேலும் கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படும் என விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT