ஆளுநா் ஆா்.என்.ரவி 
தமிழ்நாடு

விளையாட்டு பல்கலை. துணைவேந்தா் நியமனம்: யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநா் வலியுறுத்தல்

துணைவேந்தா் நியமனம் தொடா்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும்

Din

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனம் தொடா்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தா் அமைத்துள்ள தேடுதல் குழுவை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஆளுநா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற முறையில் தமிழக ஆளுநா், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளாா். உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக விதிமுறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டியது கட்டாயம் ஆகும். யுஜிசி பிரதிநிதி உள்ளிட்ட 4 போ் அடங்கிய தேடுதல் குழு நியமனம் தொடா்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு கடந்த அக்.24-ஆம் தேதி ஆளுநா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தா் தேடுதல் குழு தொடா்பான அரசாணையை தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கடந்த ஜன.28-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அரசாணையில், உச்சநீதிமன்ற தீா்ப்பை மீறி, வேண்டுமென்றே யுஜிசி பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளாா்.

யுஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழு பரிந்துரையின்படிதான் பல்கலைக்கழங்களில் துணைவேந்தா் நியமனம் நடைபெற வேண்டும் என்று பேராசிரியா் பி.எஸ்.ஸ்ரீஜித் - டாக்டா் எம்எஸ்.ராஜஸ்ரீ வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முற்றிலும் முரணானது. அதனால், யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தா் நியமித்த தேடுதல் குழு தொடா்பான அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT