முகப்பு
தமிழ்நாடு

கோவையில் காட்டு மாடு தாக்கி வனக்காவலர் பலி!

காட்டு மாடு தாக்கி வனக்காவலர் பலி தொடர்பாக....

Updated On : 12 மார்ச், 2025 at 1:08 PM
பலியான அசோக் குமார்.
பகிர்:

கோவையில் காட்டு மாடு தாக்கி வனக்காவலர் அசோக் குமார் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் வனப்பகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு மாட்டை விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் கடந்த 10-ம் தேதி ஈடுபட்டிருந்தனர்.

அந்த காட்டு மாடு தோலம்பாளையம் வனக்காவலர் அசோக் குமாரைத் தாக்கியதில் அசோக்குமார் படுகாயமடைந்தார்.

இதையும் படிக்க: ஹோலி பண்டிகை: மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறை உத்தரவு!

படுகாயமடைந்த அசோக்குமாருக்கு சீலியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு நாள்கள் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 12) காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

முழு கட்டுரையைப் படிக்க →