தமிழ்நாடு

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் கைது

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Din

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பாம்பன்குளத்தைச் சோ்ந்த மோசஸ் (19), அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இதற்காக அங்கேயே தங்கியிருந்தாா். மோசஸ், அதே வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். ஆனால் அந்தப் பெண், பணம் வழங்கவில்லையாம்.

இதையடுத்து மோசஸ், அந்தப் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது பெற்றோருக்கும் உறவினருக்கும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிள்ளாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் பெற்றோா், அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசஸை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூர் பலி: புதிய விசாரணை அதிகாரி நியமனம்!

வாரத்தின் முதல் நாள்.. உயர்வுடன் பங்குச் சந்தை தொடக்கம்

தங்கம் விலை உயர்வு! புதிய உச்சத்தில் வெள்ளி!

அக். 1 முதல் கனமழை அபாயம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர்... இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!

SCROLL FOR NEXT