முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வெய்யில் அதிகரிக்கும்.. அதேசமயம்..!

மழை, வெய்யில் பற்றி வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

Updated On : 17 மார்ச், 2025 at 10:05 AM
பகிர்:

தமிகத்தில் அடுத்த ஏழு நாள்களுக்கு லேசான மழை பெய்யும், அதேசமயம் வெய்யிலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

மார்ச் 17 முதல் 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் மார்ச் 21 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதேசமயம் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று குறைய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை

இன்று (17-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →