தமிழ்நாடு

மனைவியை கொலை செய்ய முயற்சி: விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா்.

Din

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா்.

சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவா் ஜெயந்தி (50). இவா், கணவா் ராஜேந்திரனுடன் (65) ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜெயந்தி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ராஜேந்திரன் அவதூறாக பேசி கத்தியால் ஜெயந்தியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதில் காயமடைந்த ஜெயந்தி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை உடனே கைது செய்து சிறையில் அடைத்தனா். கைதான ராஜேந்திரன் நடிகா் விஜய் சேதுபதி வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT