FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மனைவியை கொலை செய்ய முயற்சி: விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா்.

29 மார்ச் 2025, 12:51 am IST
பகிர்:

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா்.

சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவா் ஜெயந்தி (50). இவா், கணவா் ராஜேந்திரனுடன் (65) ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜெயந்தி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ராஜேந்திரன் அவதூறாக பேசி கத்தியால் ஜெயந்தியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதில் காயமடைந்த ஜெயந்தி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை உடனே கைது செய்து சிறையில் அடைத்தனா். கைதான ராஜேந்திரன் நடிகா் விஜய் சேதுபதி வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments