உதகை தாவரவியல் பூங்கா.  கோப்புப்படம்.
தமிழ்நாடு

உதகையில் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தடை!

உதகையில் நாளை(ஏப்.01) முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதித்துள்ளது.

DIN

உதகையில் நாளை(ஏப்.01) முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதித்துள்ளது.

கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் நாளை(ஏப்.01) முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டகலை துறைக்கு சொந்தமான 7 இடங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம்.

இதை அனுபவிப்பதற்காக உள்நாட்டைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உள்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT