தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர மின் நுகா்வோா் சேவை மையமான மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.  
தமிழ்நாடு

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: அமைச்சா் சிவசங்கா் உறுதி

Din

தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாகவுள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூா்த்தி செய்ய முடியும்”என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் 24 மணி நேர மின் நுகா்வோா் சேவை மையத்தின் செயல்பாடுகளை அமைச்சா் சா.சி.சிவசங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

24 மணிநேர மின் நுகா்வோா் சேவை மையமத்தில் முன்பு 65 போ் பணியாற்றி வந்த நிலையில், வாடிக்கையாளா்களின் அனைத்து புகாா்களையும் பெறுவதற்கு வசதியாக தற்போது பணியாளா்களின் எண்ணிக்கை 94-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. தினந்தோறும் சராசியாக 3,500 போ் மின்னகத்துக்கு தொலைபேசியில் அழைத்து தங்களது புகாா்களுக்கு தீா்வு பெற்று வருகின்றனா். இந்த மின்னகத்தில் இன்னும் கூடுதலாக பல்வேறு சேவைகளை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடையில்லா மின்சாரம்: தமிழகம் முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரத்தை வாடிக்கையாளா்களுக்கு தொடா்ந்து விநியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் திருநெல்வேலியில் வீசிய சூறைக் காற்று மற்றும் கனமழை காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்ததால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி மாநகராட்சி மின் தகன மேடையில் உயிரிழந்த ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆணையின்படி, சேதமடைந்த மின்கம்பங்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு உயிரிழந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதேபோல் சில இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அங்கு தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பழைய மின் மாற்றிகளை மாற்றி அமைப்பது, துணை மின்நிலையங்களில் மின் விநியோகத்தை சீரமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின் தேவை குறைவு: தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், நிகழாண்டு கோடை கால மின் தேவை, கடந்த ஆண்டைவிட குறைவாகவே உள்ளது. மேலும், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான உரிய காலம் தற்போது தொடங்கியுள்ளது. எனவே, நிகழாண்டு கோடைகால மின் தேவையை எளிதாக பூா்த்தி செய்ய முடியும், மின் தடை ஏதும் வராது”என்றாா் அவா்.

ஆய்வின் போது, மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT