உதகை தொட்டபெட்டா சிகரம் (கோப்புப்படம்)  
தமிழ்நாடு

கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவது பற்றி...

DIN

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா மலைச் சிகரம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா மலைச் சிகரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நாளை(மே 25) ஒருநாள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாள்கள் மலையேற்ற சவாரியும் நிறுத்தம் செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்திலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக, பாஜக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக நடுங்கிப் போய் உள்ளது: ஆர் பி உதயகுமார்

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு!

SCROLL FOR NEXT