துபையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் நேற்று தரையிறங்க முயன்றது. அப்போது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது சக்திவாய்ந்த லேசர் ஒளி(லைட்) அடிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.