திருப்பத்தூர்: ஒரே கருவியை பயன்படுத்திய பல் மருத்துவமனை! 8 பேர் பலி
தனியார் பல் மருத்துவமனையில் ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் 10 பேருக்கு தொற்று
திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியால் பல் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், பல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமலும், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
மருத்துவமனையின் இந்தச் செயலால் பாக்டீரியா தொற்று ஏற்பட்ட 10 பேரில் 8 பேர் பலியானதாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்தது.