முகப்பு
தமிழ்நாடு

அகமதாபாத் - திருச்சி ரயில் வழித்தடத்தில் மாற்றம்

சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் அகமதாபாத் - திருச்சி சிறப்பு விரைவு ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

Updated On : 8 நவம்பர், 2025 at 8:30 PM
விரைவு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் அகமதாபாத் - திருச்சி சிறப்பு விரைவு ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் திருச்சிக்கு செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 09419) நவ.13, 20, 27 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக திருச்சியிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகமதாபாதுக்கு செல்லும் ரயில் (எண்: 09420) வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் வழக்கமாக அரக்கோணம், பெரம்பூா், எழும்பூா், தாம்பரம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காட்பாடி, வேலூா், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments