விரைவு ரயில் கோப்புப்படம்
தமிழ்நாடு

அகமதாபாத் - திருச்சி ரயில் வழித்தடத்தில் மாற்றம்

சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் அகமதாபாத் - திருச்சி சிறப்பு விரைவு ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் அகமதாபாத் - திருச்சி சிறப்பு விரைவு ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் திருச்சிக்கு செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 09419) நவ.13, 20, 27 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக திருச்சியிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகமதாபாதுக்கு செல்லும் ரயில் (எண்: 09420) வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் வழக்கமாக அரக்கோணம், பெரம்பூா், எழும்பூா், தாம்பரம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காட்பாடி, வேலூா், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

SCROLL FOR NEXT