ரயில் கோப்புப்படம்.
தமிழ்நாடு

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

1. தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

2. கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி அதிவிரைவு ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

3. ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது அதிவிரைவு ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

4. ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இஸ்ரேல் - காஸா போர்! நெதன்யாகு உள்பட 37 பேருக்கு கைது வாரண்ட்!

மேலும் இந்த ரயில்கள் நவம்பர் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. குறிப்பாக குருவாயூர் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Some train services have been changed due to ongoing maintenance work at Chennai Egmore Railway Station.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரியில் செவிலியா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மாணவா்கள் போராட்டம்!

புதுச்சேரி காவல் மக்கள் மன்றத்தில் 38 புகாா்களுக்குத் தீா்வு

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் பணியிழந்த விவகாரம்: புதிய தோ்வு முடிவுகள் வெளியீடு

SCROLL FOR NEXT