சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
1. தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
Advertisement
Advertisement
2. கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி அதிவிரைவு ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
3. ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது அதிவிரைவு ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
4. ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இஸ்ரேல் - காஸா போர்! நெதன்யாகு உள்பட 37 பேருக்கு கைது வாரண்ட்!
மேலும் இந்த ரயில்கள் நவம்பர் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. குறிப்பாக குருவாயூர் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Some train services have been changed due to ongoing maintenance work at Chennai Egmore Railway Station.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.