கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தமிழகப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியும் நிலவுகிறது.

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ.9) வட, தென் தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) கன்னியாகுமரி, தென்காசி, தேனி, ராமநாதபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

There is a chance of rain in 6 districts including Thiruvallur for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்- தவெக அலுவலக நிர்வாகியிடம் 2ஆவது நாளாக சிபிஐ விசாரணை

லேப்டாப்களைத் திருடிய நபர்! சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணை! | CBE

தேர்தலுக்கு மத்தியில் ஜாலியாக சுற்றுலா செல்லும் ராகுல்: பாஜக விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை, திருச்சி பயணம்! முழு விவரம்!

கால்பந்தின் அரசன்..! மெஸ்ஸி நிகழ்த்திய புதிய வரலாறு!

SCROLL FOR NEXT