முதல்வர் ஸ்டாலின் பேட்டி.  
தமிழ்நாடு

எத்தனை முனைப் போட்டி வந்தாலும் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும்: முதல்வர்

புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

புதுக்கோட்டை: எத்தனை முனைப் போட்டி வந்தாலும் திமுக கூட்டணி மீண்டும் நிச்சயமாக ஆட்சியமைக்கும் என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

புதுக்கோட்டை களமாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறு வேலையில்லை. அதனால் அவர்கள் எதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி கவலையில்லை. எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம், தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமும் நடத்தப் போகிறோம். அதற்குப் பிறகு பாருங்கள்.

இதுபோன்ற கூட்டங்களைப் பார்க்கும்போது மட்டுமல்ல, எப்போதுமே எங்களுக்கு மனசு நன்றாகத்தான் இருக்கிறது.

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை முனைப் போட்டி வந்தாலும், திமுக தலைமையிலான கூட்டணிதான் மாபெரும் வெற்ரி பெறும், ஆட்சியமைக்கும். 7ஆவது முறையாக திமுக நிச்சமாக ஆட்சியமைக்கும்.

எதிர்க்கட்சிகளை நாங்கள் பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்” என்றார்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin said that no matter how many head-to-head contests there are, the DMK alliance will definitely form the government again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீரின்றி வடது ஒகேனக்கல் அருவிகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

மனித இறைச்சி கேட்டு உணவகம் சூறை: 3 போ் கைது

அயலகத் தமிழா்களின் கனவுகளை நிறைவேற்ற சிறப்புத் திட்டங்கள்: உதயநிதி ஸ்டாலின்!

போதமலைக்கு சாலை அமைக்கும் பணி: அமைச்சா், எம்.பி. ஆய்வு

கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

SCROLL FOR NEXT