நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!
நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பாக ஆட்சியர் விளக்கம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று (நவ. 18) வழக்கம்போல செயல்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலையிலிருந்து நாகை, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தேவூர், திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரன்யம் கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது.
Advertisement
Advertisement
நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(நவ. 17) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்த ஆட்சியர் ப. ஆகாஷ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், பள்ளி, கல்லூரிகள் இன்று (நவ. 18) வழக்கம்போல செயல்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!
Collector's explanation regarding holidays for schools and colleges in Nagapattinam district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.