கோவை செம்மொழி பூங்கா 
தமிழ்நாடு

தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பதிவு.

இணையதளச் செய்திப் பிரிவு

தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக, கோவை செம்மொழி பூங்கா திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக, 22.11.2021 அன்று கோயம்புத்தூர் வ.உ.சி. திடலில் நடைபெற்ற அரசு விழாவில், காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை போன்ற அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

பல்வேறு வசதிகளுடன் மொத்தம் ரூ. 208.50 கோடி செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று(நவ. 25) திறந்து வைத்தார். 

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கோவையில் செம்மொழிப் பூங்கா: தலைவரும் தந்தையுமான கலைஞர் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றிவிட்டேன்!

அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி, குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்கா இதோ உங்களின் பார்வைக்கு...” என்று குறிப்பிட்டு விடியோவை இணைத்துள்ளார்.

Chief Minister Stalin has posted that he has fulfilled the promise made by his father and former Chief Minister Karunanidhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்வு நேரத்தில் எஸ்ஐஆர் பணிகளில் மாணவர்கள்? கேரள அமைச்சர் அறிவுறுத்தல்!

வெளிச்சப்பூவே... ராஷி சிங்!

மோகினி வைபவம்... மோக்‌ஷா குஷால்!

துப்பட்டாவும் நானும் ... ஜீவிதா!

வழித்துணையே... ஜாஸ்மின் ராத்!

SCROLL FOR NEXT