வக்ஃப் வாரிய தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
வாரிய உறுப்பினா்களாக கவிஞா் சல்மா, ப.அப்துல்சமது, டாக்டா் சுபோ் கான், பாத்திமா முஸப்பா் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து நவாஸ்கனி ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக என்னை மீண்டும் தோ்வு செய்த தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், பரிந்துரை செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் ஆகியோருக்கு நன்றி. வாரிய உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.