முகப்பு
தமிழ்நாடு

டிட்வா எதிரொலி: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

டிட்வா புயல் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு அவசர உதவி எண்கள் வெளியீடு.

Updated On : 29 நவம்பர், 2025 at 7:39 AM
கனமழை எதிரொலி
பகிர்:

டிட்வா புயலின் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகின்றது.

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் இருந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரமாக வடக்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நவ.29, 30ல் தமிழகத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரித்துள்ளது.

எனவே மாநில பேரிடர் மீட்புப் படையின் 16 அணிகளும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 12 அணிகளும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், காஞ்சிபுரத்தில் டிட்வா புயல் பாதிப்புகள் தொடர்பாக மக்கள் புகார் அளிக்க எதவி எண்கள் அறிவித்துள்ளது

அந்த வகையில், 044 - 27237107 என்ற தொலைபேசி எண்ணிலும் 8056221077 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

In the wake of Cyclone Titva, heavy rain has been falling in the Kanchipuram district since this morning.

முழு கட்டுரையைப் படிக்க →