காவித்துண்டு அணிவிக்கப்பட்ட காந்தி சிலை. 
தமிழ்நாடு

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு.

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகளுக்கு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாஜக கட்சி சார்பில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாவட்டத் தலைவர் மாரிச்சக்கரவர்த்தி மற்றும் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகி வினோஜ் பி. செல்வம் உள்ளிட்டோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, கட்சியினர் காந்தி சிலையின் மேல் காவித்துண்டை அணிவித்தனர்.

பாஜகவினர் காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவித்துள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The incident of a saffron-colored piece of cloth being draped over the Gandhi statue at the Madurai Gandhi Museum has sparked a new controversy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT