காவித்துண்டு அணிவிக்கப்பட்ட காந்தி சிலை. 
தமிழ்நாடு

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு.

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகளுக்கு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாஜக கட்சி சார்பில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாவட்டத் தலைவர் மாரிச்சக்கரவர்த்தி மற்றும் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகி வினோஜ் பி. செல்வம் உள்ளிட்டோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, கட்சியினர் காந்தி சிலையின் மேல் காவித்துண்டை அணிவித்தனர்.

பாஜகவினர் காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவித்துள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The incident of a saffron-colored piece of cloth being draped over the Gandhi statue at the Madurai Gandhi Museum has sparked a new controversy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீது மோகன்தாஸ் பெண்கள் முன்னேற்றத்திற்கான குறியீடு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 26

தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை! பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீஸ் இல்லை!!

ஆனந்த வாழ்வு தரும் ஆனைமுகன்

டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதீர்கள்: தமிம் இக்பால்

SCROLL FOR NEXT