சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
தமிழ்நாடு

கரூர் பலி: பாஜக கவுன்சிலரின் மனு விசாரணைக்கு ஏற்க மறுப்பு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய பாஜக கவுன்சிலர் மனு ...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய பாஜக கவுன்சிலரின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது.

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் அருள் முருகன் அமர்வில் வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுகுமாறு மனுதாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.

ஏற்கெனவே, கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Karur stampede: BJP councilor files petition seeking order for CBI probe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

பாலியல் வன்கொடுமை: காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் - ராமதாஸ்

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! - முதல்வர் ஸ்டாலின்

வைல்டு ஃபயர்... ஜனனி!

SCROLL FOR NEXT