ஆம்ஸ்ட்ராங், ரெளடி நாகேந்திரன் 
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் முதல் குற்றவாளி ரெளடி நாகேந்திரன் மரணம்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் முதல் குற்றவாளி ரெளடி நாகேந்திரன் மரணம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருக்கும் ரெளடி நாகேந்திரன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, கடந்தாண்டு ஜூலை மாதம் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, ரெளடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன்,அரசியல் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் உள்பட 27 பேரைக் கைது செய்தது. ரெளடி திருவேங்கடம் என்பவர் காவல்துறை என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்குவதற்காக, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்தபடியே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம்தீட்டியதாக ரெளடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை மோசமடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கெனவே, அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் வியாழக்கிழமை காலை நாகேந்திரன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Rowdy Nagendran, the first accused in the Armstrong case, dies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு!

மாலத்தீவில்... ஆமிரா தஸ்தூர்!

முகமது சாலா 2 கோல்கள்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வானது எகிப்து!

துள்ளல்... காவ்யா அறிவுமணி!

வசந்தம்... மோனாமி கோஷ்!

SCROLL FOR NEXT