முகப்பு
தமிழ்நாடு

கரூர் பலி: அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் - முதல்வர்

கரூர் பலி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.

Updated On : 15 அக்டோபர், 2025 at 10:16 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

கரூர் பலி தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.

எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது.

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister Stalin has said that all parties will act responsibly regarding the Karur incident.

முழு கட்டுரையைப் படிக்க →