முகப்பு
தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை: அக். 24-ல் முதல் புயல் சின்னம்!

வரும் அக். 24 ஆம் தேதி புயல் சின்னம் உருவாக வாய்ப்பு.

Updated On : 16 அக்டோபர், 2025 at 9:07 AM
புயல் சின்னம் (கோப்புப்படம்)
பகிர்:

வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல் சின்னம் வரும் அக். 24 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (அக். 15) கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (அக். 16) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.

நேற்று (அக். 15) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்றும் (அக். 15) அதே பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நெருங்கி, மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

The Chennai Meteorological Department has stated that the first storm sign of the northeast monsoon is likely to form on October 24th.

முழு கட்டுரையைப் படிக்க →