முகப்பு
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு

நற்பணி மன்றம் வேண்டாம்: அண்ணாமலை

எனது பெயரில் நற்பணி மன்றம் அமைப்பதை கைவிட்டு, உங்கள் குடும்ப நலனை மேம்படுத்துங்கள் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

நற்பணி மன்றம் வேண்டாம்: அண்ணாமலை

எனது பெயரில் நற்பணி மன்றம் அமைப்பதை கைவிட்டு, உங்கள் குடும்ப நலனை மேம்படுத்துங்கள் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Updated On : 17 அக்டோபர், 2025 at 2:40 PM
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
பகிர்:

எனது பெயரில் நற்பணி மன்றம் அமைப்பதை கைவிட்டு, உங்கள் குடும்ப நலனை மேம்படுத்துங்கள் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன்.

எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.

எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஓடிடியில் வெளியானது அனுபமாவின் கிஷ்கிந்தாபுரி!

சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில், அண்ணாமலை நற்பணி மன்றம் இன்று துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Former BJP state president Annamalai has said that you should abandon the idea of ​​setting up a charity council in my name and improve the welfare of your family.

முழு கட்டுரையைப் படிக்க →