விராலிமலை: மதுரையில் இருந்து திருச்சி சென்ற கார் தீக்கிரை!
மதுரையில் இருந்து திருச்சி சென்ற கார் விராலிமலை அருகே திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதைப் பற்றி...
மதுரையில் இருந்து திருச்சி சென்ற கார் விராலிமலை அருகே திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிருஷ்ணா பவன் என்ற உணவகத்துக்கு சொந்தமான கார் மதுரையில் இருந்து உணவகத்துக்கு தேவையான பேக்கிங் கவர்கள் வாங்கிக் கொண்டு விராலிமலை வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது வண்டியிலிருந்து லேசாக புகை வந்துள்ளது. இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டுநர் ஜலீல்(38) விராலிமலை கொண்டமா நாயக்கன்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் உணவகம் முன்னால் காரை நிறுத்திவிட்டு வேக வேகமாக இறங்கியுள்ளார்.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து லேசாக கசிந்த புகை திடீரென மளமளவென கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது. தீப்பிளம்பாக மாறியதால் உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் உணவகப் பணியாளர்கள் பதற்றம் அடைந்தனர்.
இருப்பினும் எரிந்த கொண்டிருந்த காரில் தீயை அணைக்க முடியவில்லை. 10 நிமிடத்தில் கார் முழுவதும் எரிந்து முடிந்தது. இதுதொடர்பாக விராலிமலை காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.