வெடி விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் படம் - யூடியூப்
தமிழ்நாடு

ஆவடி அருகே வெடி விபத்து: 4 பேர் பலி

ஆவடி அருகே பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்து விபத்து நேர்ந்தது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆவடி அருகே பட்டாபிராமில் நாட்டு வெடி தயார் செய்து விற்பனை செய்யும் இடத்தில் இன்று (அக். 19) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தீபாவளியையொட்டி வீட்டில் வைத்து நாட்டு வெடிகளைத் தயார் செய்து விற்பனை செய்துவந்த நிலையில், நாட்டு வெடி வெடித்ததில் தீப்பற்றி வீடு முழுமையாகச் சேதமடைந்தது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டத் தகவலின்படி 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. இடிபாடுகளை சரி செய்யும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பட்டாபிராம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆணையர் சங்கர், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். விபத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? என இடிபாடுகளை அகற்றித் தேடும் பணியைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | 22% ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசுக்கு வலியுறுத்தல்!

Explosion near Avadi 4 killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

SCROLL FOR NEXT