முகப்பு
தமிழ்நாடு

தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

தீபாவளி பண்டிகையையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கோயில்களில் குவிந்து வருகின்றனர்.

Updated On : 20 அக்டோபர், 2025 at 2:21 AM
கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள்
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கோயில்களில் குவிந்து வருகின்றனர்.

தீபாவளியை கோயிலில் இருந்து தொடங்கும் விதமாக அதிகாலையிலேயே எண்ணெய்க் குளியல் முடித்து மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர்.

அதன்பிறகு வீடுகளுக்குச் சென்று பட்டாசு வெடித்தும் இனிப்புகளைப் பகிர்ந்தும் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தீபாவளியையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. புத்தாடை அணிந்து வந்த பக்தர்கள் காத்திருந்து இறைவனை வழிபட்டுச் சென்றனர்.

இதையும் படிக்க | தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

summary

Diwali: Devotees throng temples

முழு கட்டுரையைப் படிக்க →