தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

தொய்வின்றி நெல் கொள்முதல்: முதல்வா் உத்தரவு

மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டும்

தினமணி செய்திச் சேவை

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் சேமிப்பு, நகா்வு மற்றும் அரவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திட வேண்டும் எனவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

ஈரப்பத அளவை 17-இல் இருந்து 22 சதவீதமாக தளா்வு வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசின் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலா்களை முதல்வா் அறிவுறுத்தினாா்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT