கள்ளழகர் கோயில் EPS photo
தமிழ்நாடு

கள்ளழகர் கோயிலில் புதிய கட்டுமானங்களுக்குத் தடை

கள்ளழகர் கோயிலில் புதிய கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: மதுரை கள்ளழகர் கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரை கள்ளழகர் கோயிலில் நடைபெற்று வரும் அனைத்து விதமான புதிய கட்டுமானப் பணிகளுக்கும் மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மதுரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோயிலில் ரூ.50 கோடியில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், புதிய கட்டுமானப் பணிகளால், கோயிலின் தொன்மை பாதிப்பதாகவும், கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இதையடுதுது, மனுவை பரிசீலித்த மதுரை அமர்வு, மறு உத்தரவு வரும் வரை புதிய கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலையில் மதுரை அமர்வு இன்று இடைக்காலத் தடை விதித்து வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இந்த மனுவில், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட கோயில் அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்டோர் நவ.5ஆம் தேதிக்குள் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

SCROLL FOR NEXT