மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.
இதற்கான உத்தரவை அரசு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் பிறப்பித்துள்ளார். இது குறித்து நா. முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறப்பு வருவாய் அலுவலர் விமல்ராஜ், கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலராக ( நில எடுப்பு) ஜெ.பாலசுப்பிரமணியம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலராக பூங்கோதை, விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ஆனந்தி ஆகியோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலராக( நில எடுப்பு) ராஜலட்சுமி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக இரா. பாலாஜி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.