கூடங்குளம் அணு மின் நிலையம் கோப்புப் படம்
தமிழ்நாடு

கூடங்குளம் அணு உலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நெல்லை கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் உள்ள இரு அணு உலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அணு உலை ஒன்று மற்றும் இரண்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு விடுக்கப்பட்டுள்ளதால், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலை கடந்த 2013-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இரண்டாவது அணு உலை 2016-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த 2 அணு உலைகளும் மின்சார உற்பத்தி பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழக கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!

Bomb threat to Kudankulam nuclear reactor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானுக்கு வரம்...

நெஞ்சில் மணக்கும் நினைவுகள்...

இரவில் கல்லறைக்கு பிரியாணி ஆர்டர் செய்த பெண்! டெலிவரி செய்ய மறுப்பு!

ஒரு நூலகம் மறைந்துவிட்டது!: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

பள்ளிச்சட்டம்பி படத்தின் கயாது லோஹர் போஸ்டர்!

SCROLL FOR NEXT