கூடங்குளம் அணு உலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நெல்லை கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து...
நெல்லை கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் உள்ள இரு அணு உலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அணு உலை ஒன்று மற்றும் இரண்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு விடுக்கப்பட்டுள்ளதால், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலை கடந்த 2013-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இரண்டாவது அணு உலை 2016-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.
Advertisement
Advertisement
இந்த 2 அணு உலைகளும் மின்சார உற்பத்தி பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழக கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!
Bomb threat to Kudankulam nuclear reactor
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.