முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

மாலை 4 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 29 அக்டோபர், 2025 at 7:59 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் நேற்றிரவு கரையைக் கடந்தது.

இதன் காரணமாக புதன்கிழமை (அக். 29) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) கோயம்புத்தூர், தென்காசி, தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Department has reported that there is a possibility of rain in 6 districts for the next 3 hours.

முழு கட்டுரையைப் படிக்க →