முகப்பு
தமிழ்நாடு

மாத பராமரிப்புச் செலவுக்கு ரூ.6.50 லட்சம்! மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா மனு

மாத பராமரிப்புச் செலவுக்கு ரூ.6.50 லட்சத்தை மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க உத்தரவிடக் கோரி ஜாய் கிரிசில்டா மனு

Updated On : 30 அக்டோபர், 2025 at 9:58 AM
மாதம்பட்டி ரங்கராஜ் / ஜாய் கிரிசில்டா
பகிர்:

சென்னை: 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு உள்ளிட்டவைகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு செலவுத் தொகை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகக்கூறி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை. 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு செலவு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Joy Crisilda files petition seeking order to pay Rangaraj Rs. 6.50 lakhs per month for monthly maintenance expenses

முழு கட்டுரையைப் படிக்க →