முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் குடியரசுத் தலைவர்! சிட்டி யூனியன் வங்கி விழாவில் பங்கேற்பு!

சென்னை நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டது பற்றி...

Updated On : 2 செப்டம்பர், 2025 at 7:45 AM
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு - YT / CUB
பகிர்:

சென்னை: சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை பங்கேற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரெளதி முர்மு, அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை நந்தம்பாக்கத்தில் சென்ற திரெளபதி முர்மு, சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஆளுநர் மாளிகையில் இன்றிரவு ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர், புதன்கிழமை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.

அங்கிருந்து திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சென்று 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்து கொள்கிறாா்.

இதனையொட்டி, சென்னை, திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல்துறையினர் பல அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளனர்.

summary

President Droupadi Murmu participated in a City Union Bank function in Chennai on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.