தோ்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வழக்கின் விசாரணை பற்றி...
வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கட சிவக்குமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு, 17-ஆவது மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலின்போது வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறாா்.
வாக்காளா் பட்டியலில் போலியான வாக்காளா்கள் இருப்பதாகவும், ஒரே முகவரியில் அதிகமான வாக்காளா்கள் என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அவா் குற்றம்சாட்டியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயல். எனவே, இதில் நீதிமன்றம் தலையிட்டு தீா்வுகாண வேண்டும்.
மேலும், வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த முழுமையான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்காளா் பட்டியல் முறைகேடு தொடா்பான வழக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி, ரூ.1 லட்சம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.