கண்ணாடி இழைப் பாலம்  கோப்புப்படம்
தமிழ்நாடு

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

குமரி கண்ணாடி பாலம் குறித்து அமைச்சர் எ.வ. வேலு தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.

சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

கண்ணாடி இழைப் பாலத்தின் மீது ஒரு சுத்தியல் விழுந்ததால் ஒரு கல்லில் லேசான விரிசல் ஏற்பட்டிருந்தது. அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல அடுக்கு கண்ணாடி கல்லில் மேலே ஒரு கல்லில் மட்டும்தான் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுற்றுலா பயணிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் எ.வ. வேலு, "கன்னியாகுமரியில் கண்ணாடி இழைப் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டது. அதற்காக பாலத்தில் உடைப்பு என்பது தவறான செய்தி.

கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 650 பேர் நிற்கும் உறுதித் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Kanyakumari Glass Bridge crack repaired: Minister E.V. Velu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசடி வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நடிகை கௌதமி!

இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

விஜய் பிரசாரம்: வாகனத்தில் நிற்கக்கூடாது; கையசைக்கக் கூடாது! 23 நிபந்தனைகள்!! செய்திகள்: சில வரிகளில் | 10.9.25 | TVKVIJAY

SCROLL FOR NEXT