முகப்பு
தமிழ்நாடு

ஜனநாயகப் படுகொலைச் செய்யும் பாஜக! -அரியலூரில் விஜய்

வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் அரியலூரில் பேசியிருப்பவை...

Updated On : 13 செப்டம்பர் 2025, 9:41 pm IST
அரியலூரில் விஜய்
பகிர்:

பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு, ஜனநாயகப் படுகொலை செய்வதாக அரியலூரில் நடைபெற்ற பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள இடத்தில் தமது வாகனத்தின் மேலேறி நின்றபடி மைக் பிடித்த விஜய், தாமதமாக வந்தடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டபின் தமது உரையைத் தொடங்கினார்.

அவர் பேசும்போது, “நம்மை மேலேயும் கீழேயும் மோசமாக ஆட்சி செய்யும் பாசிச பாஜக அரசையும், விஷமத் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இந்த பாஜக அரசு கொஞ்சம்போல கொடுமைகளைச் செய்கிறது?

Advertisement

Advertisement

பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் காணோமாம்! எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் ‘வாக்குத் திருட்டு!’

வீட்டு விலாசம் ‘0’ என்று குறிப்பிட்டெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய மோசமான வேலைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.

அடுத்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்!’

2029-இல் இவர்களுடைய ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்தவொரு விஷயம்தான். இதனால், மாநில அரசுகளையெல்லாம் கலைத்துவிட்டு, எல்லா மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக தேர்தல் நடத்தும் எண்ணமே இது.

அப்போதுதானே ஒரே நேரத்தில் இந்த மாதிரியான தில்லுமுல்லு வேலைகளை எளிதாகச் செய்ய முடியும்! இதற்குப் பெயர் ‘ஜனநாயகப் படுகொலை!’ தொகுதி மறுவரையறை செய்வதன் மூலமாக தென்னிந்தியாவின் பிரதிநிதுத்துவத்தைக் குறைக்க நினைப்பது, ஒட்டுமொத்த இந்தியவுக்கும் பாஜக செய்யும் துரோகம்” என்றார்.

summary

BJP is killing democracy! -Vijay in Ariyalur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments