செங்கோட்டையன்  கோப்புப்படம்
தமிழ்நாடு

'புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்' - செங்கோட்டையன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக தொண்டர்கள் கருத்தையே தான் பிரதிபலித்ததாகவும் அது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியின் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன்,

"அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார்.

என்னை பொருத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்றைக்கு நான் மனம் திறந்து பேசினேன். இந்த கருத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களின் நோக்கம் வெற்றி பெற வேண்டும்.

அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவு நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செப். 5ல் அந்த கருத்தையே நான் பிரதிபலித்தேன். தொண்டர்கள், மக்களின் கருத்துகளையே பேசினேன். இதை புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது அவர்களுக்கு புரியும்" என்று கூறியுள்ளார்.

Former AIADMK Minister Sengottaiyan press meet on ADMK issues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி பிரமுகா்

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை!

தனியாா் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்கள் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை!

இருமத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

தைப்பூசத் திருவிழா: பூக்களின் விலை உயா்வு

SCROLL FOR NEXT