கிருஷ்ணகிரி அணை. கோப்புப்படம்
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி அணை நிரம்புவதால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி மற்றும் மொத்த கொள்ளளவு 1,666.29 மில்லியன் கன அடி ஆகும். இன்றைய நிலவரப்படி அணையின் தற்போதைய கொள்ளளவு 1415.90 மில்லியன் கன அடியாகவும் அணையின் நீர்மட்டம் 49.75 அடியாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,126 கன அடியாக உள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து வினாடிக்கு 3,126 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து கூடுதலாக நீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரையில் அதாவது கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே, தாழ்வான மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

water released from Krishnagiri Dam Flood warning for 3 districts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

265 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு

பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கருப்பை புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி: புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT