அன்பில் மகேஸ் படம் - எக்ஸ்
தமிழ்நாடு

மாணவர்கள் நலனில் அரசியல் வேண்டாம்: அன்பில் மகேஸ்

மாணவர்கள் நலனில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

மாணவர்கள் நலனில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாணவச் செல்வங்களை கற்றல் அடைவுகளை எட்டச் செய்வது, ஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது,

''கல்வி நிதியில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறது மத்திய அரசு.

சிங்களாந்தபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கட்டட மேற்கூரை பெயர்ந்தது தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். கல்வியும் சுகாதாரமும் முதல்வருக்கு இரு கண்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்கி வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக முரண்பாடு காட்டுவது யார்? மாணவர்கள் வாழ்வில் அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் அறிவார்கள் எனப் பேசினார்.

இதையும் படிக்க | நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!

No politics in student welfare: Anbil Mahesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT