திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட திமுக மாற்றியமைப்பு திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகள் அடங்கிய நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பன் மற்றும் நாங்குநேரி, இராதாபுரம் தொகுதிகள் அடங்கிய நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனையை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கவுள்ள நிலையில் இந்த உத்தரவு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.