கண்ணீர் விட்டழுத அன்பில் மகேஸ்!
சடலங்களைக் கண்டு கண்ணீர் விட்டழுத அன்பில் மகேஸ்...
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் சடலங்களைக் கண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்ணீர் விட்டழுதார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
Advertisement
Advertisement
அப்போது பலியானவர்களின் சடலங்களைக் கண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் கண்ணீர் விட்டழுதார். அவருக்கு செந்தில் பாலாஜி ஆறுதல் கூறும் விடியோ வைரலாகி வருகின்றது.
Karur Stampede : Anbil Mahesh burst into tears
இதையும் படிக்க : இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: விஜய்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.