எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்!
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பொருளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
அவரது 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம், திங்கள், செவ்வாய் (செப்.29, 30), அக்.4 ஆகிய தேதிகளில் தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சுற்றுப்பயணத் திட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அக்டோபா் 2, 3, 6 ஆகிய தேதிகளில் அந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.