கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்தியை பரப்பியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பியதாக பாஜக மாநில நிர்வாகி சகாயம் மற்றும் தவெகவை சேர்ந்த சிவனேசன், சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான நிலையில், சம்பவம் தொடர்பாக சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கரூரில் நெரிசலில் காயம்- 51 பேர் டிஸ்சார்ஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.